| உலர்ந்த கண்களோடு |
| மலர்ந்த பூக்களை விற்கிறேன் |
| வறண்ட நாவிற்கு |
| ஒரு பிடி அரிசி கிடைக்காதா என்று |
| அறுந்த செருப்போடு |
| அறுந்து வரும் செருப்புகளைத்தைக்கிறேன் |
| இருண்ட குடிசைக்கு |
| ஒரு வாசல் கிடைக்காதா என்று |
| கிழிந்த புடவையும் |
மலிந்த
முகமுமாய்
|
| வாகனத்தைத் தேடுகிறேன் |
| தகனம் செய்யும் தருணத்தில் வாய்க்கரிசிக்கு |
| ஒரு வழி கிடைக்காதா என்று |
| ஏதும் படிக்கவில்லை |
| அடையாளம் காட்டுகிறேன் |
| பழகிய தெருக்களில் |
| ஒரு வேளை பழைய சோறு கிடைக்காதா என்று |
| ஊனத்துடன் உழைப்பைக் |
| கூட்டுகிறேன் |
| சலிப்பின் வியர்வை |
| ஒரு நாள் பிழைப்பை கெடுத்துவிடக் கூடாதென்று |
| ஒண்டக் குடிசையில்லை |
| ஒய்யாரக் கூடத்தில் |
| கலவை சுமக்கிறேன் |
| பண்ட பாத்திரங்கள் எல்லாம் |
| ஒரு பாட்டில் மதுவிற்குள் மூழ்கிவிடக்கூடதென்று..! |
பாக்யா வார இதழ் - ஜூன் 20-26 - 2014
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
அருமை! பாக்யா இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் பல
Deleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteநன்று.... வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteநல்ல சிந்தனைகள் வெளிப்பட்டு வருகின்றன... பாராட்டுகள் தோழி...
ReplyDeleteதொடருங்கள்....
வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Delete"ஊனத்துடன் உழைப்பைக்
ReplyDeleteகூட்டுகிறேன்
சலிப்பின் வியர்வை
ஒரு நாள் பிழைப்பை
கெடுத்துவிடக் கூடாதென்று" என்ற
அடிகள் சிறந்து விளங்குகின்றன!
வாழ்த்தியமைக்கு என் அன்பு நன்றிகள் பல
Delete