மூழ்கும் மானிடா
"தீரா" வியாதி போல்
தீவிரவாதத் தீயில்
குளிப்பது ஏனோ ?
துப்பாகிகளும்
அணுகுண்டுகளும்
தூவி விளையாட
நாடென்ன நாடக மேடையா ?
சொல் ...
வெறிப்பிடித்த எறும்பு போல்
விரட்டி விரட்டி
கடிச்சி கொதற
மனித உயிர்கள் என்ன
கோழியா ஆடா ?
பன்னியா ?நில் ...
பிணத்தின் பெயரில்
போராட்டம் நடத்துவது
இன்னொரு பிணத்திற்காக
தேடும் ஒத்திகை கோசமா ?
யோசி ....
அணு உலை அழிக்கும்
காலம் அறிந்தும்
எதிர்மறைச் சண்டையில்
எதிரியா நானாவெனப்
பிரித்தெடுக்க
குருதியென ஆராய்ச்சி கூடமா ?
சைவம் கூட அசைவமானது
சைனஸ் நோய் போல்
மாற்று மருந்தாக ..
மார் தட்டி மோகம் தணிப்பது
மிகையாகுமா ? சிந்தித்துப் பார்
பழிக்கு பழி என்று
பாடுபடும் மனித விலங்கே
நீ பதுங்கிக்கிடக்கும்
காட்டை விட்டு
வெளியே வா
வந்து
அகிம்சை வழி நீருற்றி
அமைதிப் பூ பறிக்க
யாவரும் ஒன்றென
உரமிடுங்கள் ...!
//அகிம்சை வழி நீருற்றி
ReplyDeleteஅமைதிப் பூ பறிக்க
யாவரும் ஒன்றென
உரமிடுங்கள் ...!//
அருமையான முடிவு. பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா ...
Delete