தீபாவளி ஒரு புதிய கோணத்தில் !



"விசேசம் "
விழாவானது உலகில் 
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!


"விசேசம்" என்பது இறந்து பதினாறாவது நாள் செய்யும் காரியத்தை குறிக்கும் 

அப்படி என்றால் நாம் ஏன் தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுகிறோம் ?சொல்கிறேன் 

இன்றைய காலத்தில் யார் வீட்டிலாவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு காரியம் செய்ய 16 நாள் விசேசம் வைப்பார்கள் அன்று எண்ணை தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து அவர்களுக்கு பிடித்த பலகாரம் செய்து படையல் போட்டு விளக்கேற்றி வணக்கிய பின் அனைவரும் உண்பார்கள். அப்போது அந்த ஆன்மா சந்தோசத்தில் சொர்கத்தில் சேரும் என்பது நம் முன்னோர்கள் கருத்து ! 

அதே போல் தான் நாமும்  இன்று அந்த நரகாசுரன் இறந்த நாளை தீபாளியாக கொண்டாடி மகிழ்கிறோம் அவன் என்ன நமக்கு சொந்தமா ? இல்லையே பின் ஏன் புதுத்துணி பலகாரம் செய்து கொண்டாடுகிறோம். 

அன்று அந்த நரகாசுரன் மக்கள் அனைவருக்கும் நரகத்தையே வாரி வழங்கினான் அதானால் இறைவன் மக்கள் அனைவரையும் அவன் இறந்த நாளை விழாவாகக் கொண்டாடி வந்தால் அவன் செய்த பாவம் நீங்கி நரகத்திற்கு பதிலாக சொர்கத்தை அடைந்துவிடுவான். அப்போது நரகாசுரனுக்கு மறுபிறவியே  கிடையாது என்ற கருத்துக்கு இணங்க நாமும் அந்நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது! 

நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாமும் தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை பலி வாங்குவேன் என்பவர்களுக்கு மறு பிறவி கிடைக்காது சோ நாமளும் சந்தோசமாக வாழலாம் ஒகே .

நன்றி !





4 comments:

  1. புதிய சிந்தனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      தீபாவளி நன்றாக முடிந்ததா அண்ணா

      Delete
  2. நல்ல கருத்துக்கள்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145