சுனாமி ...!



சு என்றதும் நாவை 
சுண்டி இழுத்தது அலைகள் 
அதனால் தான் என்னவோ 
சுனாமி என்ற பெயர் வந்ததோ !

எண்ணிடா அலைகள் சேர்ந்து 
என் தாய் மக்கள் 
தலை கொய்தாயே 
நீ என்ன பேயா ? இல்லை 
சீசனில் வந்து போகும் நோயா ?

மீன் விற்று உயிர் வளர்த்தோம் 
மீண்டும் பண்டமாற்று முறை போல் 
எண்கள் உயிர் தின்று 
கடன் தீர்த்தாயோ ?

வெள்ளலைகளை கண்டு 
உள்ளம் மகிழ்ந்தோம் உன் 
தொல்லலைகளால் 
எங்கள் பெண்கள் 
வெள்ளலைகளாய் வளம் வர 
கனவு கண்டாயோ ?

பலித்த கனவு பாதை மீறியதில் 
அள்ளியக் கூந்தால் ஆடுகிறது 
அருகில் குழந்தை தேடுகிறது பசியில் 
ஆவலில் உன் அலைப் பாலை குடித்து 
உயிர் பால் புதயலானதே மண்ணில் ! 

நீர் பால் கொண்ட பூமியில் 
நிலநடுக்கம் ஏன் ?
நிறைவுடன் வழியனுப்புகிறோம் இனி 
நீ கனவிலும் கரை தாண்டாதே 
எங்கள் கடலன்னையே !









4 comments:

  1. சுனாமி மீண்டும் வரக்கூடாது! அருமையான படைப்பு!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. அப்படிச் சொல்லுங்க... அருமை...

    இனி வரவே கூடாது...

    ReplyDelete
    Replies
    1. எல்லோர் ஆசையும் அதுவே அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145