எழுதுகிறேன் ஒரு கடிதம் ...!


தூங்கிய இரவில் தாங்கிய
கனவில் ஏங்கிய வரிகளை
வாங்கி படிக்கிறேன் கவிதை
புத்தகத்தில் .....!

அதில் நான் நீயாக
நீ நானாக பண்டமாற்று
முறையில் அண்டம்
தாண்டியும் கண்டம்
தாண்டியும் காதல்
செய்கிறோம் கவிதை
மொழியில் ....!

இருந்தும் என் மண்டை
காயிந்ததால் தொண்டை வறண்டு
சண்டையிடுகிறேன் நஞ்சையுண்ட
வரிகளை என் பிஞ்சுக்கைகள்
வஞ்சமில்லாமல் தீண்டியதால்
அஞ்சமில்லாமல் எழுதுகிறேன்
ஒரு கடிதம் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145