நீ
நிழலாக இருந்தால்
நான்
நிஜமாக இருப்பேன்
நிழலே
உன் கை விரல்
அணைக்கும் கன்னத்தில்
என்
பொய் விரல்கள்
கோலம் போடுகிறது
உன்
மெய் விரல்களை
தேடியபடி
கவிதை பேனாவில்
நீ
படிக்கும் போது
என்
இதயம் துடிக்கிறது
நம்
மறைமுக வரிகளில்
வாழும்
நிறை மதியாய்
நீயும் நானும்......!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...