கண்களை வருத்தும் கண்மணிகள்...!


என் முதல் உலகம்
தாயின் கருவறை
மறு உலகம்
தந்தையின் அறிமுகம்

சிற்றன வாசலில்
சிரிக்கும் விழிகள்
பற்றெனப் பறந்தது
பாரில்

விதியவன் விரைத்த
உயிரில்
விண்ணைச் சென்ற என்
பெற்றோரின் நடு நிலையில்

கற்றென கரைந்த
கண் மணிகள்
கண்ணீர் காயங்களாய்
வெந்நீர் மாற்றத்தில்
வெந்து தணிக்கிறது

என் சொந்த சோகத்தில்
பூத்த கரு விழி மணிகள்
என் வாழ்க்கைக்கு ஒளிகளாய்
வாழ்வுவரை தொடர்கிறது

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145