உண்மை ...!


இலையுதிர்காலம்
உண்மை ....
இனியொரு வசந்தக்
காலத்தை தேடியபடியே ....!

பனியுதிர்காலம்
உண்மை ....
பரந்த உலகில்
பசியை தேடியபடியே ....!

கனியுதிர்காலம்
உண்மை ....
விதியின் நிழலில்
சுவையைத் தேடியபடியே ....!

மனமுதிர்காலம்
உண்மை .....
மரணம் அழைக்கும் போது
மண்ணை தேடியபடியே .....!

இருந்தும் .....
மரணத்தையே வெல்லும்
உண்மை .....
மறு ஜென்மமாய் பிறக்கிறது
இம் மண்ணில் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145