பண்பே நிலையான அன்பே ...!


நிலவைத் தொட்ட ஒளியில்
நிழலின் வாசம் அன்பே

மழையைத் தொட்ட ஒளியில்
மண்ணின் வாசம் அன்பே

கதிரவன் தொட்ட ஒளியில்
காதல் மலரின் வாசம் அன்பே

விண்மீன் தொட்ட ஒளியில்
விடியலின் நேசம் அன்பே

அவ்வன்பின் ஒளியில் பிறந்த
உலகம் அன்பே

உலகே உயிராய் சுமந்த
மண்ணும் அன்பே

மண்ணில் பிறந்த மானிடனின்
மனதில் புகுந்த பண்பே
ஓர் நிலையான அன்பே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145