காதல் விஷம் ....!


அரை துளி விஷமாய்
பருகிய உன்னை என்
ஆருயிரில் கலந்து நீ
அமுத கானமாய் ....

இசைக்கும் இதய துடிப்பில்
இம்சை மொழியால்
படிக்கு காதலை என்
பருவம் கற்றதால் .....!

பிடிக்கும் பொருளெல்லாம்
நீ பிம்பமாய் தோன்றி
பைத்தியம் என்ற பட்டத்தை
வாங்கி தந்தாயே ....!

கள்வா அரியர் இல்லா 
காதலியாய் என்னை உன்
அரியணையில் அமர்த்தி
அதிகார பெண்ணாய் போற்றி

என் ஆயுளை முடிக்க
அனுமதி தருவாயா சொல்
வெகுமதியாய் தருகிறேன் நம்
வெற்றி செல்வங்களை ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145