காதல் லீலைகள்...!


இளைஞர்களே....
அன்றையக் காதல்
உண்மையை வெளிப்படுத்தியதால்
உலகில் எழாமிடத்தில் இருந்தது ...!

இன்றையக் காதல்
காமத்தை வெளிப்படுத்தியதால்
கறைபடிந்து விட்டது ...!

காகிதத் தாள்களில் விளக்குகிறேன் ...?
விடிந்து பார்த்தால்
விதவையின் மறுமணம்
வியப்பில் அண்ணனை கொன்று
தம்பி வழக்கை கொடுத்தார் ...!

இதுமட்டுமா ...?
கல்லூரி மாணவனுக்கு
கைக்குட்டை போல்
காதலும் புதுசு புதுசாய்
பூக்கிறது...!

இன்னும் சொல்லப்போனால் ...?
என் உயிரே நீதான்
என்றவன் அவளுக்கு உயிர்
கொடுத்து ஓடிவிட்டான்
தாய்மையில் கண்ணீர் தொடரும் ...!

ஜாதியில்லை மதமில்லை
இனமில்லை நாடுமில்லை
இணையத்தளத்தில் காதல்
அணைந்து போகும் போது 
ஐடியும் மறந்து போகும்
மிஞ்சியது கணிப்பொறி ...!

பட்டாம் பூச்சியாய் பறந்து
விரிந்த உலகில்
கொட்டாங்குச்சி கூட
காதலிக்கிறது ....ஆம்

பள்ளியில் தொடங்கி
பஸ்டாப் வரையிலும்
தொங்கி நிற்கும் காதல்
தங்கு தடயின்றி
தொன்று தொட்டு முடிகிறது
சந்தேகக் காதலில்
சமுத்திர பிணங்களாய் ...!



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145