கவிதையாய் பிறக்கிறேன்
கடலாய் சிரிக்கிறேன்
காதலாய் வாழ்கிறேன்
கனவாய் சாய்கிறேன்
கடவுளே வெறும்
காகிதத்தில் மட்டுமே
கருணையோடு என்னை
கட்டி தழுவும்
கண்களில் பதிந்து
கண்ணீரில் நனைந்து
காவியமாய் ஓவியம்படைக்க
கனாக் காண்கிறேன்
கருப்பு வண்ண
கடிகார நாட்களில்
கை தட்டும் நல்
கற்பக விருச்சமாய்.....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...