சென்ரியுவாய்த் திருக்குறள்-201-205


குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு.
தீவினைக்கு  
அஞ்சுபவர் சான்றோர்
அஞ்சாதவர் தீயவர்
குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.
தீயினும் கொடியது 
பிறர் தீமை 
தன் நன்மை 
குறள் 203:
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல்.
வருத்தும்‌ நட்புக்கு 
தீமை செய்யாமை 
முதல் அறிவு 
குறள் 204:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் தீமை 
செய்தால் 
தன்னையே அழித்துவிடும் 
குறள் 205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
இலனாகும் மற்றும் பெயர்த்து.
வறுமையிலும் 
தீமை செய்யாதவனே 
இன்பத்தின் பணக்காரன் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145