குறள் 181: |
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் |
புறம்கூறான் என்றல் இனிது. |
துன்ப கண்ணீரை துறககும் |
இன்ப தாழ்பாள் |
புறம் பேசா பண்பு |
குறள் 182: |
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே |
புறனழீஇப் பொய்த்து நகை. |
நேரில் சிர்த்தவனை |
புறம் குத்துவது |
மனிதக்கேடு |
குறள் 183: |
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் |
அறங்கூற்றும் ஆக்கத் தரும். |
கண்ட இடத்தில் புகழுதல் |
காணா இடத்தில் பழித்தல் |
இறந்த இதம் |
குறள் 184: |
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க |
முன்னின்று பின்நோக்காச் சொல். |
நேருக்கு நேர் |
திட்டுவது குறையல்ல |
பின் குறை கூறுவது தவறு. |
குறள் 185: |
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் |
புன்மையாற் காணப் படும். |
அறவழி பயணத்தில் |
சிருமையாவன் |
புறம் பேசும் இழியவன் |
குறள் 186: |
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் |
திறன்தெரிந்து கூறப் படும். |
இவன் குறை அவன் பேச |
அவன் குறை இவன் பேச |
தவளை தன் வாயால் கெடும் |
குறள் 187: |
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி |
நட்பாடல் தேற்றா தவர். |
நட்பை வளர்க்கத் |
தெரியாதவர் நட்பு |
நாக பாம்பிற்கு சமம் |
குறள் 188: |
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் |
என்னைகொல் ஏதிலார் மாட்டு. |
உயிர் நண்பனின் குறையை |
புறம் பேசி திரிந்தவன் |
அடுத்தவரை மேடைபோட்டு பேசுவான் |
குறள் 189: |
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் |
புன்சொல் உரைப்பான் பொறை. |
இழி சொல் பேசுபவனின் |
உடல் பாவத்தை |
இப்பூமி சுமப்பது அறம் |
குறள் 190: |
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் |
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. |
நிம்மதியான வாழ்க்கை வாழ |
பிறர் குற்றத்தை |
தம் குற்றமாக போற்றுக |
சென்ரியுவாய்த் திருக்குறள்-181-190
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...