| குறள் 181: |
| அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் |
| புறம்கூறான் என்றல் இனிது. |
| துன்ப கண்ணீரை துறககும் |
| இன்ப தாழ்பாள் |
| புறம் பேசா பண்பு |
| குறள் 182: |
| அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே |
| புறனழீஇப் பொய்த்து நகை. |
| நேரில் சிர்த்தவனை |
| புறம் குத்துவது |
| மனிதக்கேடு |
| குறள் 183: |
| புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் |
| அறங்கூற்றும் ஆக்கத் தரும். |
| கண்ட இடத்தில் புகழுதல் |
| காணா இடத்தில் பழித்தல் |
| இறந்த இதம் |
| குறள் 184: |
| கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க |
| முன்னின்று பின்நோக்காச் சொல். |
| நேருக்கு நேர் |
| திட்டுவது குறையல்ல |
| பின் குறை கூறுவது தவறு. |
| குறள் 185: |
| அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் |
| புன்மையாற் காணப் படும். |
| அறவழி பயணத்தில் |
| சிருமையாவன் |
| புறம் பேசும் இழியவன் |
| குறள் 186: |
| பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் |
| திறன்தெரிந்து கூறப் படும். |
| இவன் குறை அவன் பேச |
| அவன் குறை இவன் பேச |
| தவளை தன் வாயால் கெடும் |
| குறள் 187: |
| பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி |
| நட்பாடல் தேற்றா தவர். |
| நட்பை வளர்க்கத் |
| தெரியாதவர் நட்பு |
| நாக பாம்பிற்கு சமம் |
| குறள் 188: |
| துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் |
| என்னைகொல் ஏதிலார் மாட்டு. |
| உயிர் நண்பனின் குறையை |
| புறம் பேசி திரிந்தவன் |
| அடுத்தவரை மேடைபோட்டு பேசுவான் |
| குறள் 189: |
| அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் |
| புன்சொல் உரைப்பான் பொறை. |
| இழி சொல் பேசுபவனின் |
| உடல் பாவத்தை |
| இப்பூமி சுமப்பது அறம் |
| குறள் 190: |
| ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் |
| தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. |
| நிம்மதியான வாழ்க்கை வாழ |
| பிறர் குற்றத்தை |
| தம் குற்றமாக போற்றுக |
சென்ரியுவாய்த் திருக்குறள்-181-190
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...