குறள் 171: |
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் |
குற்றமும் ஆங்கே தரும். |
உழைக்கா செல்வத்தை |
உரிமை கொள்பவன் |
குடும்பம் அழியும் |
குறள் 172: |
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் |
நடுவன்மை நாணு பவர். |
ஒன்றை இழந்தால் |
இரண்டு போகுமென்பவர் |
நீதிக்கு அஞ்சுபவர் |
குறள் 173: |
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே |
மற்றின்பம் வேண்டு பவர். |
அகிலத்தின் |
பேரின்பம் |
அறநெறி இன்பம் |
குறள் 174: |
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற |
புன்மையில் காட்சி யவர். |
வறுமையிலும் |
திருடி வாழதவர் |
பேர் அறிஞர் |
குறள் 175: |
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
வெஃகி வெறிய செயின். |
பட்டம் படித்தவன் |
பகல் கொள்ளை |
பயனில்லா நூலறிவு |
குறள் 176: |
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் |
பொல்லாத சூழக் கெடும். |
காசுக்கா அருளை விரும்பியவன் |
கம்பி எண்ணுவான் |
புழல் சிறையில் |
குறள் 177: |
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் |
மாண்டற் கரிதாம் பயன். |
நண்பனின் காதலியை |
மனைவியாக்க துடிப்பவன் |
வாழ்க்கை நலம் தராது |
குறள் 178: |
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை |
வேண்டும் பிறன்கைப் பொருள். |
செல்வம் மென்மேலும் வளர |
பிறர் கைப்பொருளை |
விரும்பாதே |
குறள் 179: |
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் |
திறன்அறிந் தாங்கே திரு. |
பிறர் பொருள் கவரதவனிடம் |
திருமகள் |
குடி புகுந்தால் |
குறள் 180: |
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் |
வேண்டாமை என்னுஞ் செருக்கு. |
அடுத்தவர் பொருளை |
விரும்பா இதயத்துக்கு |
வெற்றி தோல்வி துசி |
சென்ரியுவாய்த் திருக்குறள்-171-180
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...