| குறள் 171: |
| நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் |
| குற்றமும் ஆங்கே தரும். |
| உழைக்கா செல்வத்தை |
| உரிமை கொள்பவன் |
| குடும்பம் அழியும் |
| குறள் 172: |
| படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் |
| நடுவன்மை நாணு பவர். |
| ஒன்றை இழந்தால் |
| இரண்டு போகுமென்பவர் |
| நீதிக்கு அஞ்சுபவர் |
| குறள் 173: |
| சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே |
| மற்றின்பம் வேண்டு பவர். |
| அகிலத்தின் |
| பேரின்பம் |
| அறநெறி இன்பம் |
| குறள் 174: |
| இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற |
| புன்மையில் காட்சி யவர். |
| வறுமையிலும் |
| திருடி வாழதவர் |
| பேர் அறிஞர் |
| குறள் 175: |
| அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
| வெஃகி வெறிய செயின். |
| பட்டம் படித்தவன் |
| பகல் கொள்ளை |
| பயனில்லா நூலறிவு |
| குறள் 176: |
| அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் |
| பொல்லாத சூழக் கெடும். |
| காசுக்கா அருளை விரும்பியவன் |
| கம்பி எண்ணுவான் |
| புழல் சிறையில் |
| குறள் 177: |
| வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் |
| மாண்டற் கரிதாம் பயன். |
| நண்பனின் காதலியை |
| மனைவியாக்க துடிப்பவன் |
| வாழ்க்கை நலம் தராது |
| குறள் 178: |
| அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை |
| வேண்டும் பிறன்கைப் பொருள். |
| செல்வம் மென்மேலும் வளர |
| பிறர் கைப்பொருளை |
| விரும்பாதே |
| குறள் 179: |
| அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் |
| திறன்அறிந் தாங்கே திரு. |
| பிறர் பொருள் கவரதவனிடம் |
| திருமகள் |
| குடி புகுந்தால் |
| குறள் 180: |
| இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் |
| வேண்டாமை என்னுஞ் செருக்கு. |
| அடுத்தவர் பொருளை |
| விரும்பா இதயத்துக்கு |
| வெற்றி தோல்வி துசி |
சென்ரியுவாய்த் திருக்குறள்-171-180
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...