ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள் :
| குறள் 81: |
| இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |
| வேளாண்மை செய்தற் பொருட்டு. |
| அண்டைவீட்டாரை அனுசரிப்பதும் |
| விருந்தினருக்கு உதவுதல் |
| இல்வாழ்க்கையின் அழகு |
| குறள் 82: |
| விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
| மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. |
| விருந்தினரை மறைத்து |
| உண்ட பண்டம் |
| விஷமானது |
| குறள் 83: |
| வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
| பருவந்து பாழ்படுதல் இன்று. |
| விருந்தினருக்கு உதவினால் |
| வறுமை துன்பம் |
| குடும்பத்தை நெருங்காது |
| குறள் 84: |
| அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து |
| நல்விருந்து ஓம்புவான் இல். |
| மனமகிழ்ச்சி முகமலர்ச்சி |
| ஜொலிக்கும் வீட்டில் |
| திருமகள் குடி இருப்பாள். |
| குறள் 85: |
| வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி |
| மிச்சில் மிசைவான் புலம். |
| விதை நெல்லை |
| விருந்தளிப்பவன் |
| சிறந்த பண்பாளன் |
| குறள் 86: |
| செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
| நல்வருந்து வானத் தவர்க்கு. |
| விரும்பாத விருந்தினரை உபசரித்து |
| வரும் விருந்தினரை எதிர் பார்ப்பவன் |
| கடவுளின் விருந்தினன்! |
| குறள் 87: |
| இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
| துணைத்துணை வேள்விப் பயன். |
| விருந்தினரின் தகுதிக்குமேல் |
| விருந்தளிப்பது |
| அளவிட முடியாத நன்மை |
| குறள் 88: |
| பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
| வேள்வி தலைப்படா தார். |
| கஷ்டத்தில் சேர்த்த செல்வம் |
| தன் இஷ்டத்தில் செலவளிபவன் |
| புண்ணியத்தை இழப்பான்...! |
| குறள் 89: |
| உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
| மடமை மடவார்கண் உண்டு. |
| கோடி செல்வம் இருந்தும் |
| கொடைவள்ளல் அற்றவர் |
| மூடர் |
| குறள் 90: |
| மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
| நோக்கக் குநழ்யும் விருந்து. |
| முகம் கோணி |
| அமிழ்தம் படைத்தால் |
| வாடும் அனிச்சப் பூ |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...