சென்ரியுவாய்த் திருக்குறள் - 111-115

ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள்:


குறள் 111:

தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பகைவர், அயலார், நண்பர் 
என்று பாகுபாடில்லா நீதி 
நடுவுநிலைமை 
குறள் 112:

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
நீதி மான்களின் செல்வம் 
எல்லா  தலைமுறைக்கு 
பாதுகாப்பாக இருக்கும்.
குறள் 113:

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
அன்றே யொழிய விடல்.
நீதி தவறிய லாபம் 
ஒரு போதும் 
நன்மை தராது 
குறள் 114:

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப்ப படும்.
இன்றும் என்றும் பேசப்படுவது 
ராமன் புகழ் 
ராவணன் இகழ்
குறள் 115:

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
கோடாமை சான்றோர்க் கணி.
வாழ்வும், தாழ்வும் 
விதியால் இல்லை 
நீதியால் உள்ளது


2 comments:

  1. பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145