| ஹிஷாலியின் திருக்குறள் சென்ரியுக்கள்: குறள் 101: |
| செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
| வானகமும் ஆற்றல் அரிது. |
| பெருமைக்கு உதவாமல் |
| வறுமைக்கு உதவுபவன் |
| வான் வையகதிற்கு ஈடு ஆக |
| குறள் 102: |
| காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் |
| ஞாலத்தின் மாணப் பெரிது. |
| உயிருக்கு போராடும் தருணத்தில் |
| கைமாறு கருதா உதவி |
| பூமியை விட மிகப் பெரியது |
| குறள் 103: |
| பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் |
| நன்மை கடலின் பெரிது. |
| பிறர் மொய் நாடாமல் |
| பெருமையற்று செய்யும் உதவி |
| கடலை விட பெரியது...! |
| குறள் 104: |
| தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் |
| கொள்வர் பயன்தெரி வார். |
| தர்கசமயத்தில் செய்யும் உதவி |
| பயன் பெற்றோர் |
| போற்றுவார் வானளவு |
| குறள் 105: |
| உதவி வரைத்தன்று உதவி உதவி |
| செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
| வாங்கிய உதவிக்கு மேல் |
| பொருள் உதவுவது |
| இருவரின் சிறந்த பண்பளவு...! |
| குறள் 106: |
| மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க |
| துன்பத்துள் துப்பாயார் நட்பு. |
| நேர்வழி நட்பு |
| துன்பத்தில் தூக்கிவிட்ட நட்பு |
| இரண்டையும் மறப்பது தவறு...! |
| குறள் 107: |
| எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் |
| விழுமந் துடைத்தவர் நட்பு. |
| ஜென்மமெல்லாம் புகழ் பெற |
| அடுத்தவரின் |
| துன்பத்தை போக்குக |
| குறள் 108: |
| நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது |
| அன்றே மறப்பது நன்று. |
| இதயத்தின் நல் அறம் |
| நல்லதை மறக்காமல் |
| கெட்டதை மறப்பது |
| குறள் 109: |
| கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த |
| ஒன்றுநன்று உள்ளக் கெடும். |
| கொலையளவு தீமை |
| செய்தாலும் அவரின் |
| முன் நன்மை மறவாதே |
| குறள் 110: |
| எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை |
| செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |
| பாவத்தை அழிக்கும் வழி |
| பிறரின் நன்மையை |
| மறக்காதிருந்தால் |
சென்ரியுவாய்த் திருக்குறள் - 101 to 110
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
நாம் மழையில் நனைகையில் மனதுக்கு மோட்சம் மழைக்கு மரணம் சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...