| எட்டு திசைக்கும் |
| ஓர் ஒற்றையடிப்பாதை |
| ஊழலின் முதல் புள்ளி...! |
| கருவறை கல்லறை |
| பயணங்கள் நடுவில் |
| இன்ப நாட்கள்...! |
| சாலைகளில் ஓர் |
| சாணக்கியன்.... |
| தவறிய நேரங்கள்...! |
| தினமொரு கொலைகள் |
| தினத் தந்தியில்... |
| குப்பை தொட்டியில் நீதி...! |
| உணவுக்காக |
| உயிரைக்கொன்றவன் |
| உலகின் கடவுள்...! |
| எழுத்தறிவித்தவன் |
| இதயம் தைக்கிறான் |
| ஊசியில்லா நூல்...! |
| அச்சாணி |
| கணினி |
| பந்தய உலகம்...! |
| இதயம் சுற்றும் |
| பறவை மனிதன் |
| ஈகை மொழிகள்...! |
| பறிக்கும் போது |
| பார்வை இழந்தேன் |
| அழகின் சிரிப்பு...! |
| கட்டிய கூடு |
| வெட்டிய மரங்கள் |
| வேடந்தாங்கலாய் பறவைகள்...! |
| மரத்தின் மானம் |
| மனிதனின் சாபம் |
| அழித்தல் காத்தல்...! |
| காட்டில் |
| தேவதை நிழல் |
| உயிரின் தாலாட்டு ...! |
| காக்கையின் கழிப்பிடம் |
| கருப்பு சிலைகள் |
சுதந்திரம் எங்கே..! |
காற்றுக்கும் |
மரணமில்லை |
கண்கள் சாகும் வரை...! |
பணத்தின் வரவு |
பாவத்தி செலவு |
ஏற்ற இறக்கங்கள்...! |
சென்ற இடமெல்லாம் |
சிறப்பு |
ஒன்றுடன் பூஜ்யம்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 17
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
திசைகள் எட்டிலும் தேடிபாா்கிறேன் அவளே வந்தாள் ஒன்பதாவது திசையாக
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...