எட்டு திசைக்கும் |
ஓர் ஒற்றையடிப்பாதை |
ஊழலின் முதல் புள்ளி...! |
கருவறை கல்லறை |
பயணங்கள் நடுவில் |
இன்ப நாட்கள்...! |
சாலைகளில் ஓர் |
சாணக்கியன்.... |
தவறிய நேரங்கள்...! |
தினமொரு கொலைகள் |
தினத் தந்தியில்... |
குப்பை தொட்டியில் நீதி...! |
உணவுக்காக |
உயிரைக்கொன்றவன் |
உலகின் கடவுள்...! |
எழுத்தறிவித்தவன் |
இதயம் தைக்கிறான் |
ஊசியில்லா நூல்...! |
அச்சாணி |
கணினி |
பந்தய உலகம்...! |
இதயம் சுற்றும் |
பறவை மனிதன் |
ஈகை மொழிகள்...! |
பறிக்கும் போது |
பார்வை இழந்தேன் |
அழகின் சிரிப்பு...! |
கட்டிய கூடு |
வெட்டிய மரங்கள் |
வேடந்தாங்கலாய் பறவைகள்...! |
மரத்தின் மானம் |
மனிதனின் சாபம் |
அழித்தல் காத்தல்...! |
காட்டில் |
தேவதை நிழல் |
உயிரின் தாலாட்டு ...! |
காக்கையின் கழிப்பிடம் |
கருப்பு சிலைகள் |
சுதந்திரம் எங்கே..! |
காற்றுக்கும் |
மரணமில்லை |
கண்கள் சாகும் வரை...! |
பணத்தின் வரவு |
பாவத்தி செலவு |
ஏற்ற இறக்கங்கள்...! |
சென்ற இடமெல்லாம் |
சிறப்பு |
ஒன்றுடன் பூஜ்யம்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 17
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...