| குறள் 41: |
| இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் |
| நல்லாற்றின் நின்ற துணை. |
ஹிஷாலீ
சென்ரியு
|
| மூன்று இயற்கை |
| முத்தான மருந்து |
| கடமை...! |
| மூவழி சொந்தம் |
| துணை நிற்பது |
| இல்லறம்...! |
| கடமையின் s |
| முதல் படி |
| மூவர் அறப்படி...! |

| குறள் 42: |
| துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும் |
| இல்வாழ்வான் என்பான் துணை. |
| இல்லறம் |
| இனிக்க |
| ஈகை நன்று...! |
| துறந்தவர் வறியவர் |
| உதவுபவன் |
| நல்ல கணவன்...! |
| மறைந்த தாய் |
| வறுமை வாழ்க்கை |
| கணவனே கண்கண்ட
தெய்வம்...!
|
| குறள் 43: |
| தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு |
| ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. |
ஹிஷாலீ
சென்ரியு
|
| மூத்த தலைவர்கள் |
| வாழ்வின் முதுகெலும்பு |
| அறநெறி தவறாமை...! |
| வான் வாழ் மக்கள் |
| செய்யா உதவி |
| ஏழைக்கு உதவுவது சிறப்பு...! |
| மறைந்த தெய்வங்கள் |
| நிறைந்த விருந்தோம்பல் |
| சிறந்த
இல்வாழ்க்கை...!
|

| குறள் 44: |
| பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை |
| வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். |
| ஹிஷாலீ சென்ரியு |
| கோடி பொருள் செல்வம் |
| குறைவில்லா பண்பு |
| வாழ்வின் ஒழுக்கம்...! |
| காக்கையின் குணம் |
| பழியில்லா பண்பு |
| அழியா ஒழுக்கம்...! |
| பாவமில்லா பொருள் |
| அழியா புண்ணியம் |
| பரம்பரைக்கே...! |

| குறள் 45: |
| அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை |
| பண்பும் பயனும் அது. |
ஹிஷாலீ
சென்ரியு
|
| நல்லறம் பெற |
| தூய அன்பு போதும்...! |
| பயன் அறியா |
| பண்பு செய்தால் |
| இல்வாழ்க்கை செழிக்கும்...! |
| ஈதல் குணம் |
| சுற்றத்தின் அன்பு |
| இனிய
குடும்பம்...!
|

| குறள் 46: |
| அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் |
| போஒய்ப் பெறுவ எவன். |
| ஹிஷாலீ சென்ரியு |
| சிரம் தாழ்த்தி |
| சினமறியா இல்வாழ்க்கை |
| ஏழுஜென்ம பயன் |
| அறநெறி பயன் |
| இடையூறு இல்லா |
| இல்வாழ்க்கை |
| துரவரமற்ற முனிவர் |
| தூய இல்லறம் |
| மக்கள் பேர் |
| குறள் 47: |
| இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
| முயல்வாருள் எல்லாம் தலை. |
| ஹிஷாலீ சென்ரியு |
| இல்வாழ்க்கையின் |
| சிறந்த இலக்கண |
| நல்லோர் போற்றுவது |
| அறம் அறிந்து |
| இயல்போடு நடப்பவன் |
| அதிசிய மனிதன் |
| கடவுள் மனைவி |
| இரண்டும் |
| அறநெறி கண்கள் |
| குறள் 48: |
| ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை |
| நோற்பாரின் நோன்மை உடைத்து. |
| ஹிஷாலீ சென்ரியு |
| துறவி நோன்பு |
| பிறவி பயன் |
| கிட்டா பேர் புகழ் |
| தன் அறம் |
| பிற அறமாகக்கடவுக |
| வாழ்க்கை வளம்பெறும் |
| துறப் பெருமையைவிட |
| அற இல்வாழ்க்கை |
| ஆண்மையின் வலியது |
| குறள் 49: |
| அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் |
| பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. |
| ஹிஷாலீ சென்ரியு |
| கணவனின் தாரகமந்திரம் |
| பழியில்லா புண்ணியம் |
| நல்ல மனைவி |
| குற்றமற்ற இல்வாழ்க்கை |
| குறைவில்லா நன்மை |
| பிறர் பழியா நன்று |
| கோவலன் |
| கண்ணகி |
| பழிவாங்கியது மதுரை |
| குறள் 50: |
| வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் |
| தெய்வத்துள் வைக்கப் படும். |
| ஹிஷாலீ சென்ரியு |
| அறநெறி தவறா |
| கணவன் மனைவி |
| வானின் தேவர்கள் |
| அறத்திற்கு இணையானது |
| தெய்வத்தின் அருங்குணங்கள் |
| பொருந்திய இல்வாழ்க்கை |
| பூமியின் ஒழுக்கம் |
| வானில் மின்னுகிறது |
| கடவுள்
வடிவில் மனிதன்
|
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...