| குறள் 11: |
| வான்நின்று உலகம் வழங்கி வருதலால் |
| தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. |
| கலைஞர் உரை: |
| உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. |
| மு.வ உரை: |
| மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். |
| சாலமன் பாப்பையா உரை: |
| உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம். |
ஹிஷாலியின் சென்ரியு |
பருவ தூறல்கள் |
| உலகம் நிலைக்க |
| மழையே அமிழ்தம் |
| உயிர்களுக்கு |
| அமிழ்தம் |
| வான் மழை |
| தாய் பாலை விட |
| தாயகம் காக்கும் |
| வான் மழை |
| குறள் 12: |
| துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் |
| துப்பாய தூஉம் மழை. |
| கலைஞர் உரை: |
| யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது. |
| மு.வ உரை: |
| உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். |
| சாலமன் பாப்பையா உரை: |
| நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே. |
| ஹிஷாலியின் சென்ரியு |
இயற்கை இதயம் |
| விளை நிலத்தில் |
| மழை நீர் |
| உணவும் நீரும் |
| இவ்வையகம் |
| விவசாயம் |
| விஞ்ஞானம் |
| விவசாயம் |
| மழை ...! |
| குறள் 13: |
| விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து |
| உள்நின்று உடற்றும் பசி. |
| கலைஞர் உரை: |
| கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். |
| மு.வ உரை: |
| மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். |
| சாலமன் பாப்பையா உரை: |
| உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும். |
ஹிஷாலியின் சென்ரியு |
பரந்த கடல் |
| பாலைவனம் |
| பயிர்கள் ...! |
| பசியின் கொடுமை |
| பொய்யான மழை |
| பயன்படா கடல் |
| பார் |
| பசி |
| விண்ணின்று...! |
| குறள் 14: |
| ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் |
| வாரி வளங்குன்றிக் கால். |
| கலைஞர் உரை: |
| மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும். |
| மு.வ உரை: |
| மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். |
| சாலமன் பாப்பையா உரை: |
| மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். |
ஹிஷாலியின் சென்ரியு |
பருவம் தவறிய மழை |
| வாடிய கொக்கு |
| வறட்சியில் உழவன் ...! |
| மண்ணரிகும் ஏர் |
| உழாத மக்கள் |
| மழை வளம் ...! |
| குறள் 15: |
| கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்க |
| எடுப்பதூஉம் எல்லாம் மழை. |
| கலைஞர் உரை: |
| பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும். |
| மு.வ உரை: |
| பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். |
| சாலமன் பாப்பையா உரை: |
| பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான். |
| ஹிஷாலியின் சென்ரியு |
முன் பின் |
| காக்கும் |
| மழை...! |
| கொடுப்பது |
| எடுப்பது |
| பெய்யா மழை |
| நலிந்த உள்ளம் |
| செழிந்த வாழ்வு |
| மழை |
| குறள் 16: |
| விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே |
| பசும்புல் தலைகாண்பு அரிது. |
| கலைஞர் உரை: |
| விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும். |
| மு.வ உரை: |
| வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. |
| சாலமன் பாப்பையா உரை: |
| மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும். |
| ஹிஷாலியின் சென்ரியு |
பொழியாத வானம் |
| தளிராத புல் |
| வறண்டது காடு |
| அருமருந்து |
| புல் அழிகிறது |
| விழாத மழை ...! |
| மழைத்துளிகள் |
| தலைவன் |
| பசும்புல் |
| நுனி புல் கருகியது |
| பட்டினியில் |
| ஓரறிவுயிர்கள் |
| குறள் 17: |
| நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி |
| தான்நல்கா தாகி விடின். |
| கலைஞர் உரை: |
| ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும். |
| மு.வ உரை: |
| மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். |
| சாலமன் பாப்பையா உரை: |
| பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும். |
| ஹிஷாலியின் சென்ரியு |
மாறியது மேகம் |
| வற்றியது கடல் |
| பயன்படா உலகம் |
| கவிஞரின் பேனா |
| புகழற்ற போதும் |
| பயன்பட்டது சமுதாயம் |
| கடலறிவு |
| கரை சேர்க்கிறது |
| வாழ்கிறது சமுதாயம் |
| குறள் 18: |
| சிறப்பொடு பூசனை செல்லாது வானம் |
| வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு |
கலைஞர் உரை: |
| வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?. |
| மு.வ உரை: |
| மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. |
| சாலமன் பாப்பையா உரை: |
| மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. |
|
ஹிஷாலியின் சென்ரியு |
கழுதைக்கும் கழுதைக்கும் |
| கல்யாணம் |
| மழை வேண்டி...! |
திருவிழா |
| தெய்வவழிபாடு |
| விரக்தியில் மக்கள்...! |
நாட்களுண்டு ஆண்டுண்டு |
| பொய்த்தது மழை |
| பூஜை திருவிழா...! |
குறள் 19: |
| தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் |
| வானம் வழங்கா தெனின் |
கலைஞர் உரை: |
| இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும். |
| மு.வ உரை: |
| மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். |
| சாலமன் பாப்பையா உரை: |
| மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. |
ஹிஷாலியின் சென்ரியு |
ஈகை தவம் |
| பெருகிய உலகம் |
| சிறப்புடன் மழை…! |
| கொடுக்கும் கைகள் |
| வணக்கும் மக்கள் |
| மறக்காத வானம்..! |
| தானம் தவம் |
| பார்வையற்ற மக்கள் |
| இருண்ட உலகம்...! |
குறள் 20: |
| நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் |
| வான்இன்று அமையாது ஒழுக்கு. |
| கலைஞர் உரை:உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். |
| மு.வ உரை: |
| எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். |
| சாலமன் பாப்பையா உரை: |
| எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது. |
| ஹிஷாலியின் சென்ரியு |
|
கொக்கு நாரை
|
|
குளத்தில் மீன்
|
|
விரட்டியது மழை...!
|
|
நீரில்லா உலகம் |
| நிலையில்லா ஒழுக்கம் |
| வானின்று...! |
சுத்தமில்லை |
| சுகாதரமில்லை |
| நீரில்லா வாழ்க்கை...! |
சென்ரியுவாய்த் திருக்குறள் 11 to 20
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!

பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
thanks
Delete