ஜெயித்திடு மனமே !

கடவுளின் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் விதியைக்
கண்டு அஞ்சாதே

நீ தரிக்கும் போதே
உனக்கான மரண ஓலை
எழுதப்பட்டுவிட்டது
அதை தீயில் பொசுக்கிவிட்டுப்
புதிய ஓலை எழுத புறப்படு

உன்னில் துயில்கொள்ளும் 
கிரகணங்களை கண்டு
அடங்கிவிடாதே அதையே
ஆட்டிவைக்க பொறந்தவன் நீ
முடிந்தால் உன் கரையில்
கலங்கரை விளக்காக நில்

அத்தனை துன்பங்களையும்
அடைத்து வைக்க முடியாத
பானை உண்டென்று சொன்னால்
அது உன் இதயம் தான்
வெடித்து சிதறும் வரை
விரட்டிக்கொண்டே இரு

சந்தோசத்தை தவிர
எல்லா தோஷமும் உன்னை
முடக்கிப் போட்டாலும்
முட்டிக்கொண்டு உயிர்த்தெழு
பீனிக்ஸ் பறவையாக

வெற்றிக்கு பின்னால்
வரும் தோல்விகளுக்கு
உயிரை ஊற வைத்த பின்
எதற்கு பயம் துணிந்து போராடு
விடியலை தேடும் நிலவாக 

நேற்றும் உண்டு
நாளையும் உண்டு
இன்று மட்டும் மாற்றமில்லை
மாறவேண்டும்
தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை
ஜெயித்திடு மனமே !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145