| கவியோடு பிறந்த தமிழமுதே -எங்கள் |
| செவியோடு இனிக்கும் நின் புகழினிதே ! |
| கனவோடு சிதைந்தோர் மனமதிலே -உன் |
| கழைக்கூத்தியின் காதல்பேசும் நூலினிதே ! |
| அமிழெது விஷமெதுவென ஏற்றப்பாட்டு -ஒன்றே |
| இளைஞர் இலக்கியமென்று வாழ்தலினிதே ! |
| கனமதில் காதல்கொள்ளும் மனங்களிலே -நல் |
| இன்பக் கடலினில் மூழ்கிடும் தேனிதே ! |
| தலைமையோடு புகழோங்கும் மலரினிலே -நாளும் |
| தலைமலை கண்ட தேவரினிதே ! |
| திகழொடு தாழ்ந்தோர் மணந்தனிலே -எங்கும் |
| தித்திக்கும் சுடர்முத்த நல் தீர்ப்பினிதே! |
| கற்கண்டு சுவைமனக்கும் காதல் நினைவினில் -நற் |
| கருணை பேசும் கடல்மேற் குமிழினிதே ! |
| கவிதொடுக்கும் கதராடைப் பாட்டுதனிலே -புரட்சி |
| காப்பியம்பேசும் தமிழச்சின் கத்தினிதே ! |
| மயிலமுது குயிலின் இருண்ட வீடுதனிலே - நல்கும் |
| முல்லைக்காடு இசைக்கும் அழகின்சிரிப்பினிதே |
| மானுடம் போற்று குறிஞ்சித்திட்டுதனிலே -புதுவை |
| மக்கட்பேறு போற்றும் குடும்பவிளக்கினிதே ! |
பாவேந்தர் பாரதிதாசன் 125ஆவது பிறந்தநாள் விழா
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...