பாவேந்தர் பாரதிதாசன் 125ஆவது பிறந்தநாள் விழா

Related image


கவியோடு பிறந்த தமிழமுதே -எங்கள் 
செவியோடு இனிக்கும் நின் புகழினிதே !
கனவோடு சிதைந்தோர் மனமதிலே -உன் 
கழைக்கூத்தியின் காதல்பேசும் நூலினிதே !
அமிழெது விஷமெதுவென ஏற்றப்பாட்டு -ஒன்றே 
இளைஞர் இலக்கியமென்று வாழ்தலினிதே !
கனமதில் காதல்கொள்ளும் மனங்களிலே -நல் 
இன்பக் கடலினில் மூழ்கிடும் தேனிதே !
தலைமையோடு புகழோங்கும் மலரினிலே -நாளும் 
தலைமலை கண்ட  தேவரினிதே !
திகழொடு தாழ்ந்தோர் மணந்தனிலே -எங்கும் 
தித்திக்கும் சுடர்முத்த நல் தீர்ப்பினிதே!
கற்கண்டு சுவைமனக்கும் காதல் நினைவினில் -நற் 
கருணை பேசும் கடல்மேற் குமிழினிதே !
கவிதொடுக்கும் கதராடைப் பாட்டுதனிலே -புரட்சி 
காப்பியம்பேசும் தமிழச்சின் கத்தினிதே !
மயிலமுது குயிலின் இருண்ட வீடுதனிலே - நல்கும் 
முல்லைக்காடு இசைக்கும் அழகின்சிரிப்பினிதே 
மானுடம் போற்று குறிஞ்சித்திட்டுதனிலே -புதுவை  
மக்கட்பேறு போற்றும் குடும்பவிளக்கினிதே !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145