ஹைக்கூக்கள்

எச்சில் இலை
படியளக்கும் 
கையேந்தி பவன் ...!
வாடாத மனத்துடன்
அலங்கரிக்க வருகிறது 
தலையணைப் பூக்கள் ...!

தெருவோரம் 
சிறகை விரிக்கும் 
சிறுவனின் மனசு ...!
அடைத்து வைத்த கோழி
சுதந்திரமாய் வெளிவருகிறது
குஞ்சுகள் ...!
ஆபத்தின் விளிம்பை 
வெளிச்சம் போட்டு காட்டுகிறது 
உடைந்த கண்ணாடி ...!
லேசான தென்றல் காற்று
ஏழுப்பிச் செல்கிறது
ஆழிப் பேரலையை ....!
சுமக்கும் தகுதியிருந்தும் 
சுமையானது 
முதிர் கன்னி ...!
வீதி உலா 
விடை தெரியாமல் அமர்ந்திருக்கும் 
கோயில் சிலை ...!
விடியல் கிடைத்தும்
சிறைக்குள் தள்ளப்பட்டது
நிலா
நடுங்கிக் கொண்டிருக்கும் 
நட்சத்திரங்கள்...
பனி விழும் இரவு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145