| இருள் படிந்த கடல் கரை | |||
| வெளிச்சம் பிறக்கிறது... | |||
| காதல் ஜோடிகள் ...! | |||
| வறுமை கோட்டை | |||
| திருத்திக் கொண்டிருக்கிறது | |||
| எழுதப்பட்ட ஓவியம் ...! | |||
| மூங்கில் காடு | |||
| இசைத்துக் கொண்டேயிருக்கிறது | |||
| காற்று...! |
|||
| |||
| பேசாத பொம்மைகள் | |||
| பேசுகிறது | |||
| வாய்மையை ...! | |||
| கூரை காய்ந்து | |||
| மாளிகையானது | |||
| பயிர் வைத்த நிலம் ...! | |||
| பாம்பைக் கண்டதும் | |||
| கிளியின் ஆரவாரம் | |||
| உயிர் பெற்றது அணில் ...! | |||
| பிரிவின் தூரம் | |||
| நிரப்பி செல்கிறது | |||
| கனவு குதிரை ...! | |||
| குறுக்கெழுத்துப் போட்டி | |||
| சரியான விடைக்குப் பரிசு | |||
| படிக்காதவன் வெற்றி ...! | |||
| சூரியன் மறைந்தது | |||
| மா கோலமிடுகின்றாள்... | |||
| நிலவு பெண்! |
ஹைக்கூக்கள் !
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...