![]() முக்கண் வேந்தனே |
| மூவுலகத்தின் தலை மகனே |
| எக்கண் உன்னை போதித்தாலும் |
| இரங்கியருள் புரியும் சிவனே போற்றி |
| நந்திக்கு முதல்வனே |
| நடனத்தின் கலை மகனே |
| சிலையாக உன்னை பாவிப்போருக்கும் |
| சித்தம் தெளியவைக்கும் சிவனே போற்றி |
| சக்தியின் துணைவனே |
| சரித்திரத்தில் சிறந்தவனே |
| முக்தி வேண்டுமென்று கேட்போருக்கு |
| சக்தியளித்திடும் சிவனே போற்றி |
| அனைத்துயிரிலும் சிறந்தவனே |
| யாணை முகத்தின் அப்பனே |
| அரும் பசியாற்றுவோர் நெஞ்சில் |
| அமர்ந்திருக்கும் சிவனே போற்றி |
| மயானத்தின் மாயவனே |
| மந்திரத்தின் மூலவனே |
| எந்திர மயமான உலகத்திலும் |
| மந்திர திருநீறணிந்த சிவனே போற்றி |
சிவன் பாடல் ...!
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...

பாடல் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.