வெற்றி உன்வாசம் ...!

ஆ போட பழகும் போது 
அடிகள் பல வாங்கினேன் 
அத்தனையும் 
வெற்றிப் படிகளாக மாற 
உன் வசம் தான் உள்ளது 
என்றாள்  அம்மா ....
நடை பழகும் போது 
விழுந்து விழுந்து அழுதேன் 
இந்த தழும்புகள் எல்லாம் 
ஓர் நாள் இரும்பாகும் 
என்பதை
உணர்த்தினார் அப்பா 
இரண்டையும் இன்று 
இணைத்துக் காட்டினேன் 
வெற்றிக்கும் தோல்விக்கும் 
இடையில் இருப்பது 
வெறும் 
இயலாமையே என்று ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145