| பாவாடை சட்டையிலிருந்து |
| தாவணிக்கு மாறினேன் |
| அக்காவின் பழமை எனக்கு |
| புதுமையாக காட்சியளித்தது |
| கிழிந்த கோனார் நோட்ஸ்யை |
| மலிந்த விலையில் வாங்கி |
| பொழிந்த முகத்துடன் படிக்கையில் |
| அங்கே குறித்துவைத்திருந்த குறிப்புகள் |
| முக்கியமாக காட்சியளித்தது |
| எண்ணிரண்டு வயதைக் கடந்து |
| எங்க ஊர் கல்லூரிக்கு செல்கையில் |
| பக்கத்து வீட்டு அக்காவின் |
| பழைய சுடிதார்கள் எனக்கு |
| சரியாக பொருந்தும் போது |
| இன்னொரு அக்காவாக காட்சியளித்தது |
| இரவல் படிப்பை முடித்து |
| இளைப்பாறும் தருணத்தில் |
| இறந்த அப்பாவின் வேலை |
| இரவலாக கிடைத்தப் போது |
| இன்னும் இனிக்கிறது |
| வறுமையை விட வாலிபம் |
| மிகவும் கொடுமையை என்று ...! |
"இளமையில் வறுமை"
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...