வாக்கு மாறாத நாக்கு ...!

Death hoax of Aachi Manorama
கடுகு பொரித்த சத்தம் கேட்டு 
கதிரவன் தன் கண் விழிக்க 
நாளை பொழுதும் நன்மை வேண்டி 
நாலு பேருக்கு உணவு அளிக்க 
கூனி குனிந்து கும்பிடு போட்ட காலத்திலும் 
கொடுத்த வாக்கு மாறாத நாக்கு 
சுத்தமான பாட்டியின் ஞாபகம் !

கலப்பை பிடித்த சத்தம் கேட்டு 
கம்பங்கூழும் தன் கண் மறைக்க 
கோமணப் பொழுதுடன் கொண்டவளை வந்ததடைந்து 
வாமன ராமனை வணங்கிய வாங்கிய 
கடனையெல்லாம் வாக்கு தவறாமல் 
கொடுத்தப்பின் சோற்றில் கைவைக்கும் 
தாத்தாவின் ஞாபகம் !

மதிமுகம் பூப்படைந்த சத்தம் கேட்டு 
மச்சான் தன கண் மெய்சிலிர்க்க 
குச்சில் கட்டும் தாய்மாமன் தான் 
மாதவி மகளானாலும் மாலையும் கழுத்துடன் 
மங்காத சீர்வரிசையில் மஞ்சள் தாலிக்கு 
என் மகனே சொந்தமென்று வாக்கு கொடுத்த 
தாய் மாமனின் ஞாபகம் !

வெட்டு குத்து சத்தம் கேட்டு 
வெறி பிடித்த ஜாதி கூட்டம் 
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் 
வாழ்ந்த காலம் தனை மறந்து 
உள்ளம் ஒன்றென கலந்துதவும் 
ஊரார் மத்தியில் மத்தாப்பு வெடி முழங்க 
மாசி மகம் திருவிழாவில் மடிந்து வணங்கும்
தெய்வவாக்கு ஞாபகம் !

(http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/2016_8.html)

2 comments:

  1. சிறந்த படைப்பு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145