உலகமே இருண்டிருக்கும் ...!



என்றோ
எழுதப்பட்ட காதல் எல்லாம்
இன்று வரை
எடுத்துக் காட்டாகத் தான் உள்ளது
யாரும் எடுத்துரைக்கவில்லை 
படித்தும் பயன் பெறவில்லை
பிடித்திருந்தால்
பிழையை
உலையில் போட்டு
கொதிக்க விட்டுருப்பான்
தேவதாஸ் ...
புரிந்திருந்தால்
அம்பிகாவதி அமராவதி
மருந்தாக உண்டிருப்பார்கள்
அடிமைக்கு விலை போன
சாதி மதங்கள் எல்லாம்
அகதி முகாமில் மாண்டிருக்கும்
மிஞ்சிய செல்கள் எல்லாம்
வஞ்சிக் கொடிக்கும் வாழ்க்கை
தந்திருக்கும்
வாங்கப்படாத வார்த்தைகள்
எல்லாம்
விற்கப்பட்ட கவிஞர்களிடம்
வெட்கப்பட்டு அழுதிருக்கும்
கிழித்து எரியும் பத்திரிக்கை
ஒளிந்து விளையாடும் மெட்டி
ஒத்திகை பாராதிருந்தால்
உலகமே இருண்டிருக்கும்
ஆனால் 
இடைப்பட்ட நேரத்தில்
ஈர்க்கபட்ட 
ஆதம் ஏவாள் 
என்னவென்று 
இதுவரை குறிக்கப்படவில்லை 
பள்ளி சான்றிதழில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145