
| என்றோ |
| எழுதப்பட்ட காதல் எல்லாம் |
| இன்று வரை |
| எடுத்துக் காட்டாகத் தான் உள்ளது |
| யாரும் எடுத்துரைக்கவில்லை |
| படித்தும் பயன் பெறவில்லை |
| பிடித்திருந்தால் |
| பிழையை |
| உலையில் போட்டு |
| கொதிக்க விட்டுருப்பான் |
| தேவதாஸ் ... |
| புரிந்திருந்தால் |
| அம்பிகாவதி அமராவதி |
| மருந்தாக உண்டிருப்பார்கள் |
| அடிமைக்கு விலை போன |
| சாதி மதங்கள் எல்லாம் |
| அகதி முகாமில் மாண்டிருக்கும் |
| மிஞ்சிய செல்கள் எல்லாம் |
| வஞ்சிக் கொடிக்கும் வாழ்க்கை |
| தந்திருக்கும் |
| வாங்கப்படாத வார்த்தைகள் |
| எல்லாம் |
| விற்கப்பட்ட கவிஞர்களிடம் |
| வெட்கப்பட்டு அழுதிருக்கும் |
| கிழித்து எரியும் பத்திரிக்கை |
| ஒளிந்து விளையாடும் மெட்டி |
| ஒத்திகை பாராதிருந்தால் |
| உலகமே இருண்டிருக்கும் |
| ஆனால் |
| இடைப்பட்ட நேரத்தில் |
| ஈர்க்கபட்ட |
| ஆதம் ஏவாள் |
| என்னவென்று |
| இதுவரை குறிக்கப்படவில்லை |
| பள்ளி சான்றிதழில் ...! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...