செமிப்பாக மாறும் செய் கூலி சேதாரம் ...!



1 gm     8 gm
2544     20352
8 x 35 280
Total 712320
15% 106848
vat 1% 7123.2

Total 826291.2
என்னங்க மேல கணக்கு போட்டிருக்கேனா
இந்த காலத்தில் வரதட்சனை என்பது அத்தியாவசமான ஒன்றாகிவிட்டது அதற்கு காரணம் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தான்.
அதை கொஞ்சம் மாற்றும் முறையில் ஒரு திருமணத்தில் பிறந்த கருத்தை இங்கே தெரிய படுத்த விரும்புகிறேன்
சுமார் 35 பவுன் நகை கேட்டால் அதற்கான மொத்த செலவு சுமார் ரூ 8,25,000/- ஆக்கும்
அதன் விவரம் மேலே சொல்லியிருக்கிறேன்
இதில் செய்கூலி சேதாரம் என்று சுமார் 1,25,000/- சரி நகை வாங்கிவிட்டோம் அடுத்து இந்த நகையை வீட்டில் வைத்தால் திருடன் தொல்லை கழுத்தில் அணிந்தால் வழிப்பறி தொல்லை சரி விடுங்கள் வங்கியில் வைத்தால் மாதா மாதம் வட்டி கட்ட வேண்டும். எவ்வளவு நாளைக்கு அந்த வட்டியை கூட்டி பாருங்கள் உங்களுக்கு புரியும்.
இல்லை எதோ அவசர செலவு என்று வங்கயில் அடமானம் வைக்க போனால் அதற்கும் வட்டி !!
சரி அடமான தொகை பத்தவில்லை என்றால் வெளியில் கடன் வாங்க வேண்டும் பின் அதற்கும் வட்டி கட்ட வேண்டும். இதை சமாளிக்க விற்கப் போனால் அப்போது வாங்கிய தொகையை விட சுமார் (1,25,000/- ) குறைத்து தான் விற்க வேண்டும். அதுவும் போதவில்லை என்றால் கடன் தான் தீர்வு
ஏன் இந்த போராட்டம்
நகைக்கு பதில் பணமாகவே கொடுத்து பாருங்கள் அது உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை கூறுகிறேன்
முதலில் அந்த 8,00,000/- யை வங்கியில் FD போடுங்கள் சுமார் ஒரு வருடத்திருக்கு 
(100000 /- க்கு ரூ 800 வீதம் வட்டி தொகை (800x8=6400 x12 = 76,800/-) கிடைக்கும் .

இதில் வருட வட்டி 10,000/- க்கு மேல் போனால் வங்கி வரி 10% (7680) போக உங்களுக்கு எவ்வளவு லாபம் இருக்கிறது இதனால் நாடும் வருமான வரியால் பயன் பெரும்.
இல்லை இருவர் கணக்கிலும் பாதிப்பாதியாக போடுங்கள் இன்னும் வருமான வரி குறையும் வாய்ப்பு உள்ளது.
இந்த இலாபத்தை வைத்துக்கொண்டு உங்களின் சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்
இல்லை என்றால் உங்கள் வருங்கால குழந்தையின் கல்வி செலவிற்கு பயன்படுத்தாலம்,மாதம் மாதம் Insurance தொகை கட்டலாம், சீட்டு போடலாம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இல்லை அதே வங்கியில் மறு சேமிப்பில் சேமிக்கலாம், இதனால் உங்கள் மனைவி வீட்டில் இருந்துகொண்டு மாதம் ஒரு வருமானத்தை ஈட்டுவது போல் தன்னம்பிக்கைபிறக்கும்.

கொஞ்ச நாள் சுய கழித்து தொழில் தொடங்க உதவியாக இருக்கும்
சும்மா அறையில் பூட்டி கிடக்கும் நகை எவ்வளவு உதவியாக இருக்கிறது 
இதனால் நிச்சயம் ஒரு குடும்பம் வளரும் என்றால் நாடு வளராதா ?

யோசியுங்கள் இப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் நகையின் மீது இருக்கும் மோகம் குறையும், விலையும் குறையும் கீழ் மட்டத்தில் இருக்கும் குடும்பங்களும் பயனைடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145