கருணாநிதிக்கு 92-வது பிறந்த நாள் வாழ்த்து ...!




கருணாநிதியே ...
புறஜாதிப் பூக்கள்
உன் திருவடி தொழுகையில்
கண்டோம் பாரதியாக ...!
பகல் இரவு பாராது
பச்சி முதல் பாமரருக்கும்
உழைக்கையில்
கண்டோம் பெருமாளாக ...!
சட்ட திட்டங்கள்
சாட்சி மாறுகையில்
சட்ட சபை ஏறி
சவால் விடுகையில்
கண்டோம் அம்பேத்கராக..!
விழுந்த விதை
எழுந்து வருகையில்
விழுந்து வணங்கும்
மக்கள் நடுவில்
கண்டோம் சூரியனாக ...!
வயது தளர்ந்தாலும்
வரலாறு படைக்கும்
பேனாவின்
அகிம்சை மொழியில்
கண்டோம் காந்தியாக ...!
தூற்றுவோர் தூற்றினாலும்
துவண்டுவிடா திராவிடனின்
மூச்சுக் காற்றில்
கண்டோம் போதிமர புத்தனாக ...!
ஏன் பிறந்தோம்
ஏன் வளர்ந்தோம்
என்றில்லாமல்
எல்லோர் நலன் கருதி
வாழ்வதில்
கண்டோம் கர்ணனாக ...!
எட்டாத இடத்தில்
இருந்தாலும்
தி.மு கா வில் பட்டா போட்ட
தலைவனே
தமிழ் உள்ளவரை
உன் தலை வாழ்ந்திருக்க
கண்டோம் சரஸ்வதியாக ...!
தமிழுக்கு பசியூட்டிய
கவி செம்மலே உன்னை
காவல் தெய்வமென்று
வணங்குவதில்
கண்டோம் கடவுளாக ...!
திறமைக்குப் பரிசளித்து
வறுமைக்கு
விடை கொடுக்கும்
விருதாகக் கண்டோம்
அதிசயங்களின் ஒன்றாக ...!
ஈரடியால் வாழும்
வள்ளுவனுக்கு
ஆறடி சிலை வைத்த
கன்னியாகுமரியில்
கண்டோம்
கலங்கரை விளக்கமாக ...!
இப்படி கண்டெடுத்த
அஞ்சுகத்தின் முத்தே
தி மு கவின் சொத்தே
நின் புகழ் வாழ்க நூறாண்டு ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145