கருணாநிதியே ... |
புறஜாதிப் பூக்கள் |
உன் திருவடி தொழுகையில் |
கண்டோம் பாரதியாக ...! |
|
பகல் இரவு பாராது |
பச்சி முதல் பாமரருக்கும் |
உழைக்கையில் |
கண்டோம் பெருமாளாக ...! |
|
சட்ட திட்டங்கள் |
சாட்சி மாறுகையில் |
சட்ட சபை ஏறி |
சவால் விடுகையில் |
கண்டோம் அம்பேத்கராக..! |
|
விழுந்த விதை |
எழுந்து வருகையில் |
விழுந்து வணங்கும் |
மக்கள் நடுவில் |
கண்டோம் சூரியனாக ...! |
|
வயது தளர்ந்தாலும் |
வரலாறு படைக்கும் |
பேனாவின் |
அகிம்சை மொழியில் |
கண்டோம் காந்தியாக ...! |
|
தூற்றுவோர் தூற்றினாலும் |
துவண்டுவிடா திராவிடனின் |
மூச்சுக் காற்றில் |
கண்டோம் போதிமர புத்தனாக ...! |
|
ஏன் பிறந்தோம் |
ஏன் வளர்ந்தோம் |
என்றில்லாமல் |
எல்லோர் நலன் கருதி |
வாழ்வதில் |
கண்டோம் கர்ணனாக ...! |
|
எட்டாத இடத்தில் |
இருந்தாலும் |
தி.மு கா வில் பட்டா போட்ட |
தலைவனே |
தமிழ் உள்ளவரை |
உன் தலை வாழ்ந்திருக்க |
கண்டோம் சரஸ்வதியாக ...! |
|
தமிழுக்கு பசியூட்டிய |
கவி செம்மலே உன்னை |
காவல் தெய்வமென்று |
வணங்குவதில் |
கண்டோம் கடவுளாக ...! |
|
திறமைக்குப் பரிசளித்து |
வறுமைக்கு |
விடை கொடுக்கும் |
விருதாகக் கண்டோம் |
அதிசயங்களின் ஒன்றாக ...! |
|
ஈரடியால் வாழும் |
வள்ளுவனுக்கு |
ஆறடி சிலை வைத்த |
கன்னியாகுமரியில் |
கண்டோம் |
கலங்கரை விளக்கமாக ...! |
|
இப்படி கண்டெடுத்த |
அஞ்சுகத்தின் முத்தே |
தி மு கவின் சொத்தே |
நின் புகழ் வாழ்க நூறாண்டு ...! |
|
|
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...