கல்லறை நினைவுகளை ...!



அனுபவமே இல்லா 
ஆசையின் 
கேள்வி கணைகளை 
தொடுக்கையில் 
அரக்கியானேன் 
எச்சில் நனையாத 
விசும்பின் 
வார்த்தை ஜாலங்களை 
தடுக்கையில் 
 ராட்சசியானேன் 
சுவையோ அறியாத 
தேக நீரின் உருகு நிலை 
குறையும் தருவாயில் 
பேயானேன் 
ஆனாலும் 
முறித்துக் கொள்ளவில்லை 
காதலில் பிரியும் 
கல்லறை நினைவுகளை ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145