ஹிஷாலியின் ஹைக்கூ,

இரு மன வானில் 
ஒரு மணக் கூடு 
காதலர் தினம் ...!

காட்டு பாலை அழித்து 
பாலித்தீன் பால் கறக்கிறது 
ஆடு மாடுகள் ...!


பன்னிரண்டு மணி நேர வேலையை 
ஒரு நொடியில் தின்றது
விபத்து ...!

பணத்தில் வெந்தாலும் 
ஜாதி 
பழைய சோறு தான் ...!

கற்றுக்கொண்டே இருக்கிறது 
அறிவு நிரம்பிய
அருவி ...!

பள்ளிக்கு போகாமலே
அல்லி கொடுக்கும்
மனம் ...!

பாலையில்
பால் சுரக்கும்
ஒட்டகம் ...!

விசிறிக்கு உதவிய 
பனை மரம் மொட்டையானது
வீட்டுமனையால் ...!

கலைந்தது 
தவம் 
மண்ணானது மலை ...!

விதைக்காமலே 
அறுவடை செய்கிறான்
பட்டதாரி ...!


2 comments:

  1. ஹைக்கூக்கள் அருமை.

    ReplyDelete
  2. சிறப்பான ஹைக்கூக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145