![]() இரு துருவமாய் |
| தவமிருக்கும் |
| மரங்கள் |
| இல்லறம் பெயராமலே |
| தாய்மை பெற்றது |
| காற்றாக |
| பருவம் அடைந்து |
| அறுவடைக்கு வந்தது |
| மழை |
| திரும்பிச் செல்லாமலே |
| உயிர் பெற்றது |
| குளம் குட்டைகளுக்கு |
| பாவாடை தாவணியாக |
| பகலை தந்து |
| இரவை அழைக்கும் |
| நிலா |
| இளைப்பாராமலே |
| விடைப் பெற்றது |
| கவிதையாக |
| வேரை மறைத்து |
| விரதமிருக்கும் |
| பூக்கள் |
| பூஜிக்காமலே |
| வரம் பெற்றது |
| விதையாக |
| பாரி அலங்கரித்த |
| கொடிகள் |
| பின் பற்றாமலே |
| பழி பெற்றது |
| தேரை இழுத்து |
| தெருவில் விட்ட |
| கதையாக |
| கனியை ஈர்த்த |
| ஆதாம் ஏவாள் |
| காதல் |
| ஜாதியில்லாமலே |
| முற்றுப் பெற்றது |
| உலகப் பொதுமுறையாக |
| சறுக்கிய நொடியில் |
| இளைப்பாறிடும் |
| உயிர்கள் |
| மரணிக்காமலே |
| மோட்சம் பெற்றது |
| மறு ஜென்மமாக |
தவமிருக்கும் மரங்கள் ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...

சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்