தவமிருக்கும் மரங்கள் ...!





இரு துருவமாய் 
தவமிருக்கும் 
மரங்கள் 
இல்லறம் பெயராமலே 
தாய்மை பெற்றது 
காற்றாக 
பருவம் அடைந்து 
அறுவடைக்கு வந்தது 
மழை 
திரும்பிச் செல்லாமலே 
உயிர் பெற்றது 
குளம் குட்டைகளுக்கு
பாவாடை தாவணியாக 
பகலை தந்து 
இரவை அழைக்கும் 
நிலா 
இளைப்பாராமலே 
விடைப் பெற்றது 
கவிதையாக 
வேரை மறைத்து 
விரதமிருக்கும் 
பூக்கள் 
பூஜிக்காமலே 
வரம் பெற்றது 
விதையாக 
பாரி அலங்கரித்த  
கொடிகள் 
பின் பற்றாமலே 
பழி பெற்றது 
தேரை இழுத்து 
தெருவில் விட்ட 
கதையாக 
கனியை ஈர்த்த 
ஆதாம் ஏவாள் 
காதல் 
ஜாதியில்லாமலே 
முற்றுப் பெற்றது 
உலகப் பொதுமுறையாக
சறுக்கிய நொடியில் 
இளைப்பாறிடும் 
உயிர்கள் 
மரணிக்காமலே 
மோட்சம் பெற்றது 
மறு ஜென்மமாக  

1 comment:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145