இரு துருவமாய் |
தவமிருக்கும் |
மரங்கள் |
இல்லறம் பெயராமலே |
தாய்மை பெற்றது |
காற்றாக |
பருவம் அடைந்து |
அறுவடைக்கு வந்தது |
மழை |
திரும்பிச் செல்லாமலே |
உயிர் பெற்றது |
குளம் குட்டைகளுக்கு |
பாவாடை தாவணியாக |
பகலை தந்து |
இரவை அழைக்கும் |
நிலா |
இளைப்பாராமலே |
விடைப் பெற்றது |
கவிதையாக |
வேரை மறைத்து |
விரதமிருக்கும் |
பூக்கள் |
பூஜிக்காமலே |
வரம் பெற்றது |
விதையாக |
பாரி அலங்கரித்த |
கொடிகள் |
பின் பற்றாமலே |
பழி பெற்றது |
தேரை இழுத்து |
தெருவில் விட்ட |
கதையாக |
கனியை ஈர்த்த |
ஆதாம் ஏவாள் |
காதல் |
ஜாதியில்லாமலே |
முற்றுப் பெற்றது |
உலகப் பொதுமுறையாக |
சறுக்கிய நொடியில் |
இளைப்பாறிடும் |
உயிர்கள் |
மரணிக்காமலே |
மோட்சம் பெற்றது |
மறு ஜென்மமாக |
தவமிருக்கும் மரங்கள் ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்