![]() சிலையாகி விட்டோம் |
| விலை போகும் நாட்டில் யாரும் |
| சிலையாகவில்லை |
| வழிக்கொரு சிலையென |
| வரலாற்றில் மட்டும் பேசப்படுகிறது யாரும் |
| வழியாகவில்லை |
| நிற்கும் சிலையை பார்த்து |
| உட்காரவில்லை |
| மனித காக்கைகள் |
| ஆயிரம் வருடங்கள் |
| முன் நோக்கி சென்றாலும் யாரும் |
| அணிவகுக்கவில்லை |
| பாடப்புத்தகத்தில் படித்துவிட்டோம் |
| சாலை புத்தகத்தில் கடந்துவிட்டோம் |
| ஓலை கிழியும் நேரத்தில் கூட |
| ஒருவரும் ஆகவில்லை |
| இன்னொரு தேச தலைவர்கள் போல் |
| ஔவை பாடல் |
| அறிவியல் தேடல் |
| கம்பன் கூடல் |
| கண்ணகி சிலம்பு என்றெல்லாம் |
| சொல்லிக்கொண்டே போகிறோம் |
| பள்ளிக்கூடத்தில் மட்டும் |
| சிலையனவர்கள் மீண்டும் |
| பிறந்தால் - மீண்டும் |
| அடிமை படுவோம் |
| அகிம்சை வளர்ப்போம் |
| சுதந்திரம் பெறுவோம் |
| தமிழனுக்குள்ளே தமிழனை மட்டும் . |
சிலையின் அழுகுரல் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...

சிலையின் அழுகுரல் வேதனை தருகிறது
ReplyDeleteதங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா
Deleteபெரியோருக்குச் சிலை வைத்தும் - அந்த
ReplyDeleteபெரியோரைப் பற்றிய அறிவை
நம் பிள்ளைகளுக்கு ஊட்டாமையால்
சிலை அழுகிறதோ!
தங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா
Deleteசிலையின் குரல் சிந்திக்க வைக்கட்டும்..
ReplyDeleteதங்கள் சிந்தனை கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அக்கா
Deleteநல்ல சிந்தனை
ReplyDeleteநன்றிகள் பல
Deleteசிந்தனை நன்று..
ReplyDeleteசிலைகள்
சிந்தும் வரலாற்றுக் கண்ணீரை
பார்போரும் இல்லை
பார்த்தாலும் துடைப்போரில்லை..
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் பல
Delete