காதல் போதை...!

நீ பேசாமல் இருக்கும் பொழுதுகள் 
விடிகிறது வெளிச்சமில்லை 
முடிகிறது உறக்கமில்லை 
நடைப் பிணம் போல் 
நடமாடுகிறேன் ....
நீயில் நானாக 
நினைவில் தீயாக

அதை ...
கண்ணின் நீர் கொண்டு 
காயத்தை துடைக்கிறேன் 
வடுக்கள் மறைந்தாலும் உன் 
வாசம்  மாறாத 
வெண்மேக மோகத்தில் 
பெண் சோகமாய் வாழ்கிறேன் 
காதல் போதையில் 

வேண்டுதல் !

(இளவரசன் இறந்த இடத்தில் 
இருந்த அம்மா ) or
தாழ்த்தப்பட்டோர் 
இதயங்கள் 
இறைவனிடம் இப்படி 
பிரார்த்தனை செய்கீறார்கள் 
"ஆண்டவனே 
இந்தத் தலைமுறை மாதிரி 
எந்தத் தலைமுறையும் 
இருந்துவிடக்கூடாது "!

ஆஸ்கார் விருதைவிட ஆனந்தமானது ...!

அன்று 
நீயும் நானும் 
ஆபாசமில்லா 
அழகிய தமிழில் 
அலைபேசியில் உரையாடிய நாள் 
ஆஸ்கார் விருதைவிட 
ஆனந்தமானது ...!

mhishavideo - 145