புள்ளி விவரமில்லா புது மனிதர்கள் ...!


உண்ண உணவில்லை
உடுத்தும் ஆடை சரியில்லை
பண் தமிழ் நாட்டினிலே
பசிதமிழ் பேசுகையிலே

எண் தமிழற்ற உயிர்கள்
எங்கெங்கும் தான் வாழ
வாங்கிய சுதந்திரம் இன்று
வாய்க்கவுமில்லை வழியுமில்லை

இவனும் வாழ்கிறான்
இந்திய தேசத்தில்
புள்ளி விவரத்தில் சேரா
புது மனிதனாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145