நச்சத்திரங்கள் கோடி கோடி சூழ - அதன்
நடுவினிலே நீந்திவரும் வெண்ணிலாவே ....!
பாலும் சோறும் பகிர்ந்தூட்டும் - தாயின்
பாடல் பாடும் வெண்ணிலாவே ......!
இரவையும் பகலாய் மாற்றி - உன்னை
இராகுவும் விழுங்கிடுமோ வெண்ணிலாவே ....!
வளர்ந்து வளர்ந்து வட்டவடிவமாய் மாறி - மீண்டும்
வாடிவாடி மறைவதேனோ வெண்ணிலாவே .....!
கூகை ஆந்தை போலவே - பகல்
கூட்டினில் உறங்கும் வெண்ணிலாவே ......!
காலத்தின் கடமையில் நிதமும் - நீ
கால் பாதி வாழ்ந்திடும் வெண்ணிலாவே .....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...