சாதல் பெண்ணே ...!


உரசும் நினைவில் உதிரும் மொழியாள்
உயிரின் வழியே உலவும் விழிபோல்
நீ இருக்கும் மனதை வெறுக்காதே
நீ இல்லா நிலையை விரும்பாதே காதல்

அரும்பாய் பூக்கும் மனதில் எறும்பாய்
ஊரும் அழகே உன் துரும்பாய் மாறி
துணை செய்கிறேன் உன்தூரத்து பார்வையில்

அன்பே கரும்பாய் இனிக்கும் கனவுகளால்
நிதம் கண்ணில் உறங்கும் சாட்சியாய்
என்னில் மெருகேற்றவா என்
இதய பூங்கொடியே

கண்ணிரண்டில் வைத்து காக்கிறேன்
காதல் கொண்ட மனதால் கால முழுவதும்
சாதல் பெண்ணே ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145