இதயம் திறந்த பறவைகள் ..!


இதயம் திறந்த பறவைகள்
இன்னிசை குரலில் பறந்தனவாம்

உலகம் அறிந்த திசைகளிலே
உயர உயர பறந்தனவாம்

பசிகள் வந்த போதிலும்
பழங்களை கொற்றி தின்றனவாம்

மச்சமுள்ள இயற்கைக்கு எச்சமுள்ள
விதைகளை மாறி மாறி ஈந்தனவாம்

பச்சைக் கொடி காட்டிலே
பாசம் வீசும் காற்றிலே

மிச்ச மீதி துளிகளாய்
மேலிருந்து விழுகையில்

தாகம் தீர்த்த மக்களே
தேகம் போற்றி வாழுங்கள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145