என் இதயத்தை
பார்க்க ஆசைப்பட்டேன்
தோழியே ...
உன் இதயம்
என் இதயமாய் துடித்த போது
பார்த்துவிட்டேன்
நட்பின் காதலை...!
**********************************
நீயும் நானும்
சந்தித்ததில்லை
நிறைய சிந்தித்திருக்கிறோம்
கவிதையில்
நாம் சந்திக்கும் வேளையில்
சிந்திக்காமல் நம்மை
சிரிக்க வைத்தது
நம் குழந்தைத் தனம்
**********************************
நீ இருக்கும் இடத்தில்
என்னைப் போல்
அன்பான தோழன்
இருந்துவிட கூடாது என்று
வரம் கேட்கிறேன் கடவுளிடம்
நட்பை மறந்து காதலில்
மூழ்கிவிடக்கூடாது என்று
**********************************
பூக்கும் காலம் அறிந்தேன்
காய்க்கும் காலம் அறிந்தேன்
உதிரும் காலம் அறிந்தேன்
வளரும் காலம் அறிந்தேன்
எந்த காலம் வந்தாலும்
நம் உயிர் காலம் உள்ளவரை
நடப்பு காலம் நடமாடட்டும்
நம் மழலையின் மறுமலர்ச்சியில்
**********************************
கடல் நீரில்
சிறு துளி சேர்ந்தாலும்
சிதைந்துவிடும் சுவை
நம் நட்பில்
ஒரு கணம் அழுதாலும்
பிளந்துவிடும் இதயம்
**********************************
எழுது கோல் சொல்லும்
உனக்கும் எனக்கும்
உள்ள வருத்தங்களை
பக்கம் பக்கமாக
**********************************
நமக்குள்ளும்
காமம் கர்ப்பமாகிறது
ஆண்டுக்கு ஆண்டு
நீ அனுப்பும்
வாழ்த்து மடலில்
தள்ளாடிய வரிகளை
கண்டபோது
**********************************
உன்னை புரியும் முன்
நீ என்னை புரிந்ததால்
வருந்துகிறேன்
வரலாற்றில் நீ வராமல்
நான் வந்த பெருமை
உன்னை சேரும் போது
**********************************
காலை வணக்கமும்
மாலை வணக்கமும்
தொடருவது போல்
தொடருவோம் நம்
நட்பு வணக்கத்தை
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...