தாய் பாலா கள்ளி பாலா
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது
பெண் சிசு கொலை
வானம் அழுதால் மழை
பூமி அழுதால் பிழை காரணம்
கண்ணீரே ஏழையின் நிலை
உனக்கும் எனக்கும் சொந்தமில்லை
இருந்தும் நம் சொந்தத்தை சுற்றுகிறது
ஊர் சுற்றும் வாலிபனாய் - தபால்
அவன் உண்ட பயிரை அழித்து
அவனே உறங்குகிறான் வீட்டில்
விவசாயத்தை மறந்த விஞ்ஞனியாய்
சில உண்மைகள்... வலிக்கிறது...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete