உப்பின் உரிமை குரல் ...!


கரை தொடும் அலையின்
கண்ணீர் உப்பு

காலை முதல் மாலை வரை
கலப்பை பிடிக்கும் விவசாயின்
கண்ணீர் உப்பு

உடலை வருத்தி
உயர்வை தேடும் வியர்வையின்
கண்ணீர் உப்பு

உயிராய் வாழும் உணவில் கலக்கும்
சுவையும் உப்பு

வாங்கிய சுதந்திரத்தில் கூட
வாழ்ந்து சாதித்த சத்தியாகிரம் உப்பு

உப்பின்றி அழியும் உடலுக்கு
ஏன் தப்பு தப்பாய் வாழ்கிறாய் மனிதா

இனியாவது செப்பும் மொழியில்
சிந்தனை கலந்து
நீ தப்பாய் பேசும்

தமிழனாய் இல்லாமல்
தமிழ் மான சிங்கமாய் தலை தூக்கு
இத் தரணியிலே......!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145