இசை...!


உயிரற்று பிறந்த என்னை
உலகில் உயிரூற்று மாறிய
மனிதா உன்னில் நான்
உயிராய் வாழ்கிறேன்
இசையின் பெயரில் ...!

எங்கும் எதிலும் தங்கு
தடையின்றி சங்கே
முழங்கும் நாதத்தில்
முதல் பங்காய் முழங்குகிறேன்
சுரிதியின் பெயரில் ...!

பொழியும் மழையிலும்
கொட்டும் அருவிலும்
அமைதியாய் பிறந்த நாதத்தில்
அழகிய யுத்தம் செய்யும்
சோகமாய் மறுக்கிறேன்
ராகத்தின் பெயரில் ....!

பாடும் பறவையிலும்
ஓடும் நதியிலும்
ஒரசும் பொரியிலும்
யார் கொண்ட பாடலை
தான் கொண்டு சேர்வதால்
தாளத்தின் பெயரில் தலை
சாய்க்கிறேன் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145