அளவுக்கு மீறினால் அமுதமாகும் நீதி ...!



ஒரு தனியார் நிறுவனம் அங்கே 20க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தார்கள் ஓர் நாள் அந்த நிறுவனத்தில் கீழ் மட்டத்தில் இருந்த பணிப்பெண் ஒரு தவறு செய்துவிட்டாள் உடனே அவள் MD நீ இங்கு வேலைக்கு சேர்ந்து எத்தனை வருடங்கள் ஆகிறது இன்று வரை நீ என்ன கற்றுகொண்டாய் என்றார் அதற்கு அவள் எந்த பதிலும் கூறாமல்  கீழே வந்தாள் தனது கோவத்தை மறைத்து கடைசியாக  அந்த MD யின் மகளை அழைத்துவரச்‌ சென்றுவிட்டாள் மறுநாள் அலுவலகம் வந்தாள் தனது ராஜினமா கடிதத்தை கொடுத்தாள் அதற்கு அவர் ஏன் இந்த முடிவு என்றார் நீங்கள் தானே சொன்னீர்கள் சார் நான் இங்கு வந்து ஒரு வேலையும் கற்றுக்கொள்ளவில்லை என்று பின் எதற்கு இங்கு நான் வேலை செய்ய வேண்டும் அதான் எனது பதவியை ராஜினமா செய்கிறேன். இதுவரை தாங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றிகள் சார் என்று சென்றுவிட்டாள்.

அவரும் ஏன் என்று கேட்காமல் அதை வாங்கி வைத்துகொண்டார் நாட்கள் நகர்ந்தது பணிகள் ஒவ்வொன்றும் தாமதமானது சில நேரம் சில பணிகள் முடிக்காமலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தார் MD இதற்கு காரணம் என்ன என்று வினாவும் போது அங்கு வரும் டாகுமென்ட்ஸ் ,மற்றும் பில்ஸ் அனைத்தையும் கவி தான் வாங்கி சரி பார்த்து அந்தந்த பையிலி போடுவாள் பின் அங்கு வரும் அனைவருக்கும் அன்பாக பதில் கூறியுள்ளார், மேலும் எவர் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்து வந்துள்ளார் என்பதையும் ஒருவர் லீவு போட்டால் அவர் வேலையை அனைத்தும் கவி தான் செய்து வந்திருக்கிறாள் என்பது அப்போது தான் புரிந்தது. 

உடனே அவர்  அலுவலக மீட்டிங் ஒன்றை ஏற்படுத்தினார் அங்கு அனைவரும் கூடினர் அப்போது தான் புரிந்தது அங்குள்ள அனைத்து வேலைகளையுமே கவி தான் செய்தாள் என்று. உடனே தொலைப்பேசி மூலம் அழைத்தார் MD.கவி வந்தாள் இந்த உனது கடைசி மாத சம்பளம் என்றார் கூடவே அடுத்த கவரையும் கொடுத்தார் உனக்கு இங்கே பணி உயர்வு செய்துள்ளேன் அத்துடன் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளேன் என்றார் இதை கேட்டது கவி மிகவும் சந்தோசப்பட்டாள்.

மேலும் அந்த MD கவியிடம் மன்னிப்பும் கேட்டார் ஒரு நிர்வாகத்தை நடத்தும் நான் சில காரணங்களால் சிலவற்றை சரியாக கவனிக்கவில்லை என்றும் மே மாதம் வாங்க வேண்டிய டாகுமெண்டை ஆகஸ்ட் மாதம் வரை வாங்கவில்லை என்ற தவறு உன்னிடமில்லை என்றும், நீ எந்த வேலையும் செய்யவில்லை என்ற விஜி கூறியதை நான் விசாரிக்காமல் விட்டதையும் நீ செய்த வேலைகள் அனைத்தையும் விஜியே தானே செய்தேன் என்று ஏமாற்றியதையும் உனது ராஜினமா கடிதத்தின் கையெழுத்தில் தான் புரிந்தேன் என்றும் விவரித்தார் இதை ஏன் இப்போது கூறினேன் என்றால் இனிமேல் இந்த மாதிரி தவறு நடக்கக்கூடாது  என்றும் என் மேல் உனக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதால் தான் கூறினேன் 
என்றார் அத்துடன் ஆல் தி பெஸ்ட் கூறினார்.

நன்றி என்ற வார்த்தையுடன் உண்மையும் சகிப்பு தன்மையும் விட்டுக்கொடுத்து போவதும் ஓர் அளவுக்கு தான் அந்த அளவு மீறும் போது  அமுதமும் என்ற நீதி தலை வணங்கும் என்ற உண்மை புரிந்தது தெளிந்தது என்று புன்னகைத்தாள் கவி. 

4 comments:

  1. சிறப்பான கதை! நல்ல கருத்து!

    இன்று என் தளத்தில்
    பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
    நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
    http://thalirssb.blogspot.in/2012/08/17.html

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் அண்ணா!

    ReplyDelete
  3. அழகிய கதை

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145