தூத்துக்குடி சோகம் !


Image may contain: 2 people, text

நெஞ்சு பொறுக்குதில்லையே 
வஞ்சி கொலை தீர்த்த இவ்
வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி
நெஞ்சு பொறுக்குதில்லையே
கஞ்சிக்கு வழியில்லை யென்று
களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் 
கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் 
கொடுமையைக் கண்டு 
நெஞ்சு பொறுக்குதில்லையே
நீதிக்கு வாயில்லை யென்று
நிலத்தடி நீரை விசமாக்கும் 
காப்பர் ஆலையை கண்டிக்க 
காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது 
நெஞ்சு பொறுக்குதில்லையே
மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில்
சங்கு முழங்கும் சாவை எண்ணி
நெஞ்சு பொறுக்குதில்லையே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145