| உழவும் தொழிலும் உலகினிரு கண்கள் |
| உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல் |
| தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள் |
| தலை முறை பசி தீர்த்திடுமே உழவரின் கரங்கள் |
|
| காணி நிலமும் கதிரவன் ஒளியும் |
| கடவுளேனெக் கொண்டு களம் சேர்த்த |
| நெல் மணிகள் உறவேதும் பாராது |
| உலகுக்கே படியளந்த விவசாயி |
|
| வளம் மிகுந்த மண்ணில் விலை உயர்ந்த |
| இயந்திரம் மக்கள் பஞ்சம் தீர்த்துவைக்க |
| மழையைத் தேடி நிலைகுலைந்த விவசாயி |
| இப்போது நிர்க்கதியா நிற்கின்றான் |
|
| விலை நிலத்திலே வீடு வந்து குடியேற |
| விற்றவனுக்குச் சோறுமில்லை பெற்றவனுக்குக் |
| கூழுமில்லை கால் வயிறு கஞ்சிக்காகக் |
| கல்லறையைத் தேடித் திரிகிறான் விவசாயி |
|
| அடைக்கலம் கொடுக்க அரசுமில்லை |
| ஆதரித்துக் கரைசேர்க்க ஆளுமில்லை |
| கூறு போட்டு ஆட்சியிலே கொடிகட்டிப் |
| பறக்கிறது பார் பஞ்சமென்னும் அன்னக்கொடி ! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...