முத்துக்கமலம் இணைய இதழில் எனது ஹைக்கூக்கள் - ஜூலை 2017

கிளையை முறித்தபின் 
பூக்கத் தொடங்கியது 
செம்பருத்திப்பூ !
தேநீர் இலை பறித்துப் போட 
அட்டைப்பூச்சியாய் உறிஞ்சுகிறது 
சாரமற்ற வாழ்வு !
ஆயிரம் காலத்துப் பயிர் 
அறுவடைக்காகக் காத்திருக்கிறது 
கோர்ட் வாசலில் !
கோவில் வாசலில் நின்று 
வணங்காமல் இருக்கும் 
காலணிகள் !
கோவில் சுவற்றில் 
அசுத்தம் செய்யும்
தெரு நாய்கள் !
கொட்டித் தீர்க்கும் மழை
வயலில் இறங்கி 
கப்பல்விடுகிறான் பேரன் !
மாமியார் மருமகள் சண்டை 
பதவி உயர்வு பெறுகிறார் 
வீட்டு வேலைக்காரி !
வளைந்து நெளிந்த புருவம் 
நேராகச் செல்கிறது 
பார்வைகள் !

4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145